தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக மழை வேண்டி கும்பகோணம், காவிரி சக்கரப்படித்துறையில், திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் திரு. எஜமான் சுவாமிகள் நல்லாசியுடன், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருளிய மேகராகக்குறிஞ்சி பதிகம் பாடி வருணஜப ஹோமம் நடைபெற்றது. இதில் ஆன்மிக அன்பர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.