நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம். அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் தீபத்திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்ககவசம், உண்ணாமலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. மலை மீது மகாதீபம் ஏற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அர்த்தநாரீஸ்வரர் கோவில் கொடி மரத்தின் முன்பு காட்சியளித்தார். தொடர்ந்து அரோகரா கோஷம் விண்ணைப்பிளக்க திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.