அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் 85 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து பிரகதீஸ்வரர் கோவில் கோபுர கலசங்களில் திருமந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலை ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கட்டியதாக வரலாறு. திருப்பணிகள் முடிந்த நிலையில் வேதமந்திரங்கள் முழங்க பக்தர்கள் பரவசத்துடன் கண்டுகளித்தனர். இத்தனை பெருமைகள் வாய்ந்த இந்த கோயிலை யுனேஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்ததுள்ளது.