திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை, சம்பந்தரால் பாடல் பெற்ற தேவாரம் பாடப்பட்ட கோயில்களுள் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 63வது சிவத்தலமாகும். அகத்திய மாமுனிவர் ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு. மேலும் இது ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது. ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி அல்லது அதற்கு முதல் நாளன்று, ஆதவனின் கதிர்கள் இம்மரகத நாதர் மீது படிவது இத்திருத்தலத்தில் பெரும் சிறப்பு. படங்கள் மற்றும் செய்திகள் உதவி: கடம்பூர் விஜயன்