மணல்மேடு - பட்டவர்த்தி சாலையில் தலைஞாயிறு தாண்டி குறிச்சி செல்லும் வழியில் அமைந்து உள்ளது சாத்தங்குடி. புலவர்களுக்கு தானமளிக்க்ப்பட்டது இந்த ஊர். இருநூறு வருடங்களாக பிராமணர் குடியிருப்பாக இருந்து தற்போது ஓரிரு குடும்பத்தினர் தவிர அனைவரும் வெளியேறிவிட, ஓர் அற்புதமான கோயில் பழையபடி கல்லாய், மண்ணாய் மாற ஆரம்பிக்கிறது. இத்தனை இல்லைகளுக்கு மத்தியிலும் ஒரு அர்ச்சகர் குடும்பம், இருவேளை பூசை செய்து வருகிறார். படங்கள்: கடம்பூர் விஜயன்.