வட மாநிலங்களில் தீபாவளிக்குப் பிந்தைய 15-வது நாளை கார்த்திகை பூர்ணிமா என்ற பெயரில் ஆறுகளில் வழிபடுவது மக்களின் வழக்கம். இதன்பேரில், கங்கை உள்ளிட்ட ஆறுகளில் ஏராளமானோர் நீராடி வழிபட்டனர். முழுநிலவின் பின்னணியில் வேதமந்திரங்களும், மேளதாளங்களும் முழங்க, கங்கைதாய்க்கு தீப ஆரத்தி காட்டப்படும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது.