முருகனின் அறுபடை வீடுகளுள் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 20-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் கந்த சஷ்டி முக்கிய நிகழ்வான இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. முதலில் கஜமுக சூரனையும், பின்பு சிங்கமுக சூரனையும், அடுத்து சூரபத்மனையும் முருகப் பெருமான் வதம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோஹரா கோஷம் முழங்க, பக்திப் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.