பவானி, காவேரி மற்றும் அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் ஸ்ரீ சங்கமேஸ்வரர் ஆகவும், இறைவி ஸ்ரீ வேதநாயகி அல்லது வேதாம்பிகைபவானி ஆகவும் அருள் பாளித்து வருகின்றனர். இந்தக் கோவிலில் ஸ்ரீ சங்கமேஸ்வரர், ஸ்ரீ வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளும் - ஸ்ரீ சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது. படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்.