காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து பாலாற்றைக் கடந்தால் சுமார் 9 கி.மீ. தொலைவில் தூசி என்ற கிராமம் அருகாமையில் இருந்து பிரியும் பாதையில் 2 கி.மீ. சென்றால் பாலாற்றின் கரைக்கு அருகில் குரங்கணில்முட்டம் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. இத்தலத்து இறைவனை வணங்குபவர்கள் வினைப்பயன்களாகிய துன்ப இன்பங்களை காணுதல் இல்லாதவர் ஆவர் என்றும், குரங்கணில்முட்டத்தை முறையாக வணங்குபவர், வினைகள் இல்லாதவர் ஆவர்.