தென்னாட்டு சிவத்தலங்களில் காவிரிக்கரையின் நூற்றுத் தொண்ணூறு சிவத்தலங்களில் நாற்பத்தி ஆறாவது தலமாக விளங்குகிறது ஆக்கூர். தேவாப் பாடல் பெற்ற காவிரித் தென் கரைத் தலம். மயிலாடுதுறை அருகேயுள்ளது. சிறப்புலி நாயனார் அவதரித்த தலம். இறைவனே அந்தணர் உருவில் வந்து, ஆயிரத்தில் ஒருவராகத் தானும் உணவருந்திய தலம். இறைவன் பெயர் : தான் தோன்றியப்பர். இறைவி : வாள் நெடுங்கண்ணி. மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மி. தொலைவில் இருக்கிறது இந்த ஆலயம். படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்