இந்துக்கள் ஆண்டு முழுவதுமே சனிக்கிழமைகளில் விரத வழிப்பாடு மேற்கொள்வது உண்டு. அப்படி ஆண்டு முழுவதும் இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பார்கள். தொடர்ந்து புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையான இன்று தி.நகர் பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.