கர்நாடகாவில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து பூவிருந்தவல்லி அருகே திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.