அப்பாஸ் கல்சுரல் அகாடமி சார்பில், மெல்லிசை நிகழ்ச்சி மற்றும் நாடகங்களை நடத்தி வருகிறது. இதில் ஒய்.ஜி.மகேந்திரனின், 'காசே தான் கடவுளடா' நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசிய அவர், நாடகத்துறை மூலமே தாம் நடிப்பைக் கற்றுக்கொண்டதாக கூறினார். மேலும், நலிந்துவரும் நாடகத்துறையைக் காக்க அரசு உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார். பிறகு கலைஞர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் கமல்ஹாசன் விருது வழங்கி கவுரவித்தார்.