தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ள நிலையில், மார்ச் 31-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. சுமார் 9,34,868 பேர் எழுதயுள்ள நிலையில் தேர்வின்போது முறைகேடுகளில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க, பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4,80,837 மாணவிகளும், 4,17,994 மாணவர்களும், 3-ஆம் பாலினத்தவர் ஒருவரும், தனித்தேர்வர்களாக 34,868 பேரும், சிறைக் கைதிகள் 98 பேரும் எழுதுகின்றனர்.