அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான மிக சக்தி வாய்ந்த புயலான "இர்மா' அமெரிக்க கரையை சுமார் 210 கி.மீ. வேகத்தில் காற்றுடனும், பலத்த மழையுடனும் தாக்கியது. அதில் ஹுஸ்டன் உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் ஃபுளோரிடா மாகாணத்தையும் கடந்து ஜார்ஜியா, தெற்கு கரோலினா மாகாணங்களிலும் இந்தப் புயல் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.