மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின. இந்த கோர விபத்தில் இதுவரை 139 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மின்சாரம், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் பல லட்சம் பேர் அவதிப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.