சென்னை தீவுத்திடலில் உலகில் உள்ள ஏழு அதிசயங்களின் பிரதிபலிப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இத்தாலி நாட்டின் பைசா நகரில் உள்ள சாய்ந்த கோபுரம். அமெரிக்காவின் எழில் கொஞ்சும் நியூயார்க் நகரின் லிபர்டி தீவில் அமையப்பெற்ற சுதந்திர தேவி சிலையும். இத்தாலி நாட்டில் ரோம் நகரில் அமைக்கப்பட்ட மிகச் சிறப்பான ஒரு நீள்வட்ட வடிவமான அரங்கமும்.இந்தியாவில் யமுனை ஆற்றின் கரையில் முழுதுவதும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னமான தாஜ்மகாலும், ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சீனப்பெருஞ்சுவரும், பிரேசில் நாட்டில் திறந்த கரங்களோடு இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ள ஏசுகிருஸ்துவின் உருவச்சிலையும், மெக்சிகோ நாட்டின் யுகட்டான் என்னுமிடத்திலுள்ள, கொலம்ஸுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் அமையப்பெற்றது.