1855ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 'மெட்ராஸ் பூங்கா' என்ற பெயரில், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டது. பின்னர் 1985ல் வண்டலூருக்கு மாற்றப்பட்டது. 1490 ஏக்கர் பரப்பளவில் பூங்கா மிகப் பிரம்மாண்டமாக விரிந்துள்ளது அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா. இங்கு சுமார் 1,675 வகையான உயிரினங்கள் உள்ளன. அவற்றில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, இருவாழ் உயிரிகள், மீன்கள் உள்ளிட்டவை அடங்கும். குறிப்பாக நீர்யானை, வெள்ளைப் புலிகள், சிங்கவால் குரங்கு, நீள வால் குரங்கு, மனிதக்குரங்கு, புள்ளி மான், இமாலயக் கறுப்புக் கரடி, செந்நாய், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, சாம்பல் நாரை, கரண்டிவாயன், வாலற்ற பெருங்குரங்கு ஆகிய விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.