தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வரும் வேலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கத்தின் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, சத்யராஜ், ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அமைதி வழியில் மவுனப் போராட்டம் நடத்தினர். மேலும் இப்போராட்டத்துக்கு ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர்.