தமிழில் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தற்போது முதல் முறையாக சூர்யாவுடன் இணைந்து அவருடைய 37-வது படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன், லண்டனில் துவங்கியது. பிரமாண்டமாக உருவாகும் இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.