பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இயற்கை எழில் சூழ்ந்த கோமோ ஏரி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தீபிகா படுகோனே சார்பில், வரும் 21ஆம் தேதி பெங்களூருவில் வரவேற்பு நிகழ்ச்சியும், அதன் பின் ரன்வீர், தீபிகா இருவரும் இணைந்து திரையுலகப் பிரமுகர்களுக்காக டிசம்பர் 1ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவுள்ளனர்.