அம்மா... அம்மா... அம்மா...

அம்மா... அம்மா... அம்மா...

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று இரவு முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. மேலும் முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடம் என்ற செய்தி பரவியதால் சென்னையில் பிற்பகல் முதலே அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டன. பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின. அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மட்டும் அப்போலோவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
Published on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com