ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருப்பதால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அதாவது ரூபாய் நோட்டின் ஓரங்களில் உள்ள பார்டரின் அளவு, காந்தியின் முகத்திற்கு அருகே காணப்படும் நிழல், தேசியச் சின்னம், பாதுகாப்பு அம்சம் நிறைந்த கோடு, காந்தியின் காது அருகே பொறிக்கப்பட்டிருக்கும் 500 ரூபாய் எழுத்து போன்றவற்றில் நிறைய வித்தியாசங்கள் தென்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.