விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டு விழாவுக்காக சிவலிங்கத்தை தூக்கி வரும் பாகுபலி விநாயகர், 6 கரங்கள், ஐந்து தலை நாகத்தில் நாக விநாயகர், பால விநாயகர், லட்சுமி விநாயகர், சித்தி, புத்தி விநாயகர், கற்பக விருட்ச விநாயகர், கமல விநாயகர், சிம்மம், யானை வாகனத்தில் எழுந்தருளும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மூன்றரை அடி முதல் 11 அடி வரை சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.