தமிழகத்துக்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டுவரும் கன்னட அமைப்புகள் ஊரடங்கு உத்தரவையும் மீறி பெங்களூரில் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டன. இதில் தமிழகப் பதிவு எண் கொண்ட பேருந்து, லாரிகள் மீது கல்வீசித் தாக்கியும், பல்வேறு இடங்களில் பேருந்துகளுக்கு தீ வைத்தனர். மேலும் துவாரகநாத் நகர் பகுதியில் தீவைத்து எரிக்கப்பட்ட தனியார் போக்குவரத்து நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்துகள்.