காவிரி பிரச்னையில் சுமூகத் தீர்வு காண மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் சார்பில் தமிழக-கர்நாடக அரசு அதிகாரிகள் கூட்டம், தில்லியில் நடைபெற்றது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் ராம மோகன்ராவ், பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.