வறட்சி நிவாரணம், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் தில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் தங்கள் சிறுநீரை தாங்களே குடித்தது, போராட்டம் நடத்தியது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மக்களின் போராட்டங்களுக்கு செவி சாய்க்க வேண்டிய அரசோ ஏனோ இன்னும் மவுனம் காத்து வருகின்றது.