பனி காலம் தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் அதிகாலை முதல் பனிமூட்டமாகக் காட்சியளிக்கிறது. தொடர்ந்து சில நாட்களாக பனிமூட்டம் அதிகரித்ததை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எதிரில் வரும் வாகனங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு பனி இருப்பதால், பெரும்பாலான வாகனங்களில் முகப்பு விளக்கு போட்டபடியே வாகங்களை இயக்கி வருகின்றனர்.