சென்னையில் மின்சார விரைவு ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 3 பேர் மின்கம்பம் மோதி உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 4 இளைஞர்கள் ஆபத்தான நிலையில் குரோம்பேட்டை மருத்துமனையிலும், ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்குவதைத் தவிர்க்க கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.