ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு தனது குடும்பத்தினரோடு சரியாக 4.50 மணிக்கு தனது வீட்டுக்கு முன் கருப்புச் சட்டை அணிந்து வந்த பத்து நிமிடங்கள் மெளன போராட்டம் நடத்தினார். இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் சிலம்பரசனின் வீட்டின் முன் கருப்புச் சட்டை அணிந்து மெளன போராட்டத்தில் கலந்து கொண்டனர். பிறகு தனது வார்த்தைக்கு மதிப்பளித்த உலகில் உள்ள அனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.