ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக சென்னை மெரீனாவில் மாணவர்கள் பெருமளவில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் மெரீனா பகுதி முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. முதலில் சிறிய அளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர் சக்தியாக விஸ்வரூபமெடுத்து தமிழகத்தை தாண்டி உலக அளவில் தமிழர்கள் ஆதரவு தெரிவிக்கும் நிலைக்கு சென்றுள்ளது. மாணவ அமைப்பு, பொதுமக்கள், சமூக ஆர்வர்கள் என விரிவடைந்த தற்போது ஐடி ஊழியர்களும் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.