பல்வேறு மாவட்டங்களை ரசிகர்களை கடந்த 2 நாட்களாக நேரில் சந்தித்து, ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க வரும் ரஜினிகாந்த், நேற்றும், நேற்று முன்தினமும் கன்னியாகுமரி, கரூர், திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, தேனி மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்களுடன் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 3வது நாளாக இன்று சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியதும் திருவண்ணாமலை, சிவகங்கை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள், ரஜினியுடன் புகைப்படம் எடுத்தனர்.