சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 42-ஆவது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கிவைத்தார். விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள், அரசுத் துறை செயலர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த உருவ பொம்மைகளின் முன் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.