சென்னையை அடுத்த வண்டலூரில் 7 கோடியே 13 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள வன உயிரின பாதுகாப்பு கட்டடத்தை முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார். பின்னர் உயிரியல் பூங்காவை பார்வையிட்ட முதல்வர் அங்குள்ள ஆண் சிங்கக் குட்டிக்கு விஷ்ணு என பெயர் சூட்டினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், பெஞ்சமின், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எம்.பி.க்கள் கே.என்.ராமச்சந்திரன், மரகதம் குமாரவேல், ஜெயவர்தன், மாவட்ட செயலாளர்கள் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், வாலாஜாபாத் கணேசன், ஆறுமுகம் உடன் சென்றனர்.