கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியாரான டாம் உழுன்னலில் ஏமன் நாட்டில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தினர். இந்திய மற்றும் ஓமன் வெளியுறவுத் துறையின் முயற்சிகளின் காரணமாக ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து கிறிஸ்தவ பாதிரியார் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தில்லியில் கேரள பாதிரியார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார்.