தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி ஆலைக்கு எதிராக 49வது நாளாக தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகள் எதிர்த்தும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.