2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கிரிக்கெட் வீரர் டோணிக்கு பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டது. ராணுவத்தில் லெஃப்டினன்ட் கலோனலாக கவுரவப் பதவி வகிக்கும் தோனி, ராணுவ சீருடையில் வந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பத்ம பூஷண் விருது பெற்றார். விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.