சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாடக் கண்காட்சியில், இந்தியாவில் தயாரான நவீன ரக பீரங்கிகள், டாங்குகள், நவீன ராடார்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களின் மாதிரிகள் ஆகியவையும் இடம் பெற்றன. இந்நிலையில் மகேந்திரசிங் தோனி கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டு, ராணுவ அதிகாரிகளிடம் அதன் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.