தென்மேற்கு பருவ மழை காரணமாக, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி நிரம்பியது. இதனிடையே கர்நாடகா மாநிலங்களில் மீண்டும் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து, கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி ஆகிய 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.