மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தில் தலைக்காவிரியாக உருவாகி குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் வழியாக தமிழகத்திற்குள் ஆர்ப்பரித்து கடல் போல் விரிந்து தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்கள் வழியாக பயணித்து இறுதியாக பூம்புகார் என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் சங்கமம் ஆகிறது. தற்போது பருவ மழை பொய்த்ததாலும் கடும் வறட்சி நிலவுதாலும் அகண்ட காவிரி வறண்டு போய் காணப்படுகிறது.