காஞ்சிபுரம் சங்கர மடத்தின் எல்லோராலும் போற்றி வணங்கப்படும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயேந்திரர், 1935ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கியில் பிறந்தார். 1954ஆம் ஆண்டு இளைய மடாதிபதியாக ஜெயேந்திரர் நியமிக்கப்பட்டார். காஞ்சிபுரம் மடத்தின் 69-வது தலைவராக 1994ல் ஜெயேந்திரர் பொறுப்பேற்றார். இவரின் இயற்பெயர் சுப்ரமணியம் மஹாதேவா.