சென்னை பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் பங்கேற்றனர். மாலை 4 மணியளவில் தொடங்கிய இப்போராட்டத்தில், தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை முழுக்கமிட்டனர். இதே போல் காஞ்சிபுரம், கோவை, நெல்லை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.