பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழளர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை பாலமேட்டில் நடைபெற்றது. ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர்.