150 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நிகழ்ந்த அபூர்வ சந்திர கிரகணமானது வானில் சூரியன், நிலா, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு இன்று மாலை 5.18 மணிக்கு துவங்கி இரவு 8.41 மணி வரை வரை நீடித்தது. இதுபோன்றதொரு சந்திர கிரகணம் மீண்டும் 2028ஆம் ஆண்டுதான் நிகழும் என்பதால் சந்திரகிரகணத்தை காண பிர்லா கோளரங்கத்தில் மக்கள் குவிந்தனர்.