நாட்டின் நிதி மையமான மும்பையில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்துகள் முற்றிலுமாக முடங்கியது. இதில் டோம்ப்விலி, தானே, கட்கோபர், குர்லா, சியான் மற்றும் தாதர் ரயில் நிலையங்களில் மழை நீர் தேங்கியது. தொடர் மழை காரணமாக மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.