சென்னை அடையாற்றில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற போது காரிலேயே குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். போலீஸ் விசாரணையில், சேதமடைந்த கார், காஞ்சிபுரத்தை சேர்ந்த புல்லட் பரிமளம் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.