2018ஆம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கி கெளரவித்தார். இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி இசைஞானி இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.