தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம் எதிரில் உள்ள மைதானம், போரூர் சரவணா ஸ்டோர்ஸ் எதிரே உள்ள மைதானம், கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம், பாரிமுனை, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை களை கட்டியது. தொடர்ந்து ஸ்வீட் ஸ்டால், துணி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.