இந்தியாவின் ஜிசாட்–29 தகவல் தொடர்பு செயற்கைகோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதில் தகவல் தொடர்புக்கு உதவும் வகையில் சக்திவாய்ந்த 'கேயு', 'கேஏ', க்யூவி - பேண்ட் கருவிகள் மற்றும் நவீன ரக கேமரா பொருத்தப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி பூமிக்கு அருகே 190 கிலோ மீட்டர் தூரத்திலும், பூமிக்குத் தொலைவில் 35,975 கிலோ மீட்டர் தூரத்திலும் தற்காலிக நீள்வட்டப் பாதையில் புவியைச் சுற்றிவரும் வகையில் நிலைநிறுத்தப்பட்டது.