1932ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய விமானப்படை தனது 86வது ஆண்டை கொண்டாடுகிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத்தளத்தில் சாகச நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியின் மூவர்ணங்களைக் கொண்ட பாராசூட்டுகளில் பறந்தபடி வீரர்கள் வானில் சாகசம் செய்தனர். கண்காட்சியில் விமானப்படையை சோ்ந்த ஜாக்குவாா், மிக்-29, மிராஜ்-2000, எஸ்யூ 30, எம்கேஐ பைட்டா் ஜெட் மற்றும் ருத்ரா ஹெலிகாப்டா்களும் இடம் பெற்றன.